மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு..!

நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹாலி-எல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பதுளை – பண்டாரவளை வீதியூடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *