சீரற்ற வானிலையால் இந்த வான் கதவுகள் திறப்பு..!

அண்மைக்காலமாக மழையுடனான வானிலை காணப்படுகிறது.

இநத சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளே இவ்வாறு திறந்துவிடப்பட்டுள்ளன.

இதற்கமைய நீர்த்தேக்கங்களின் அருகில் மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *