அடுத்த 24 மணித்தியாலத்தில் நில்வளா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்…!

மாத்தறை, மாலிம்பட, கம்புறுப்பிட்டிய, திஹகொட, அத்துரலிய மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணித்தியாலத்தில் 100 மில்லிமீட்டர மழை வீழ்ச்சி நில்வலா கங்கையை அண்மித்த பகுதியில் பெய்யும் என வளிமண்டல வியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மழை பெய்யுமாயின் நிலவலா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சாரதிகள் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *