09 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை..!

நாட்டில் பல பாகங்களில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் மணசரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இரத்தின புரி- குருவிட்ட,மாத்தறை பிட்டபெத்தர,காலி- எல்பிடிய,நாகொட ஆகிய பிரதேச செயலககங்களுக்கும் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 9 மாவட்டங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *