போலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கிய நபர் கைது..!

சமூக ஊடகத்தின் மூலம் பல போலி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை. அந்த வகையில் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் போலி சாரதி பத்திரம் வழங்கம்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நபர் ஒருவர் வைத்திருந்த சாரதி அனுமதிப் பத்திரம் போலியானது எனப் பொலிஸாரினால் கண்டறியப்பட்டு அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

அந்தவகையில் விசாரணையின் போது குறித்த நபர் ”சமூக வலைத்தளம் ஒன்றின் ஊடாகவே போலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கியவர்களின் தொடர்பு தனக்கு ஏற்பட்டதாகவும், அவர்கள் சாரதி அனுமதி பத்திரத்தைப் பெறுவதற்கு 50,000 ரூபாய் அறவிட்டார்கள் எனவும்,

தனது வீட்டிற்கு வாகனம் ஒன்றில் வந்து கைரேகைகளையும், பிற ஆவணங்களையும் பெற்றுச் சென்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

இற்கமைய போலியான சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்து கொடுத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மக்களே சமூக ஊடகங்களை கையாளும் போது விழிப்பாய் இருக்க வேண்டியது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *