இந்தோனேசியாவில் வெள்ளம்..!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக 84 வீடுகள், 16 பாலங்கள் மற்றும் இரண்டு வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்துள்ளதுடன் 90 பேர் இடம்பெயர்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

இதேவேளை கடந்த மார்ச் மாதம் மேற்கு சுமத்ராவை பாதித்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *