மீட்கப்பட்ட மாணவர்கள்..!

கடந்த 14 ஆம் திகதி அன்று கா.பொ.த சாதாரணத் தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காகக்,

கினிகத்தேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் இருவரும் பரீட்சைக்குத் தோற்றாமல் காணாமல் போயிருந்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டு மாணவிகளின் உறவினர்களும் இது தொடர்பில் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில்,

பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவிகள் இருவரும் வேலை வாய்ப்புத் தேடி கொழும்பு பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும்,

இருவரும் கடுவலை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவிகள் இருவரும் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீடொன்றில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *