லஞ்ச் ஸீட்டை உண்ண கூறிய பாடசாலை அதிபர்.

7 மாணவர்கள் லஞ்ச் ஸீட்டை உட்கொண்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவமானது நாவலப்பிட்டி வலயக்கல்வியின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றிலே இடம் பெற்றுள்ளது.

மதிய உணவினை லஞ்ச் ஸீட்டில் சுற்று கொண்டு வந்ததனையடுத்து குறித்த பாடசாலையின் அதிபர் லஞ்ச்ஸீட்டினை உட்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவர் லஞ்ச் ஸீட்டை உட்கொண்டமையினால் குறித்த மாணவர்கள் பாதிப்புற்று நாவலப்பிட்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த மாணவரின் பெற்றோர் நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *