09வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தேர்வு செயவதற்கான வாக்கெடுப்பு இன்று..!

09 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் காலை 7.00 மணி முதல் மாலை 04 மணி வரை இடம் பெற்றது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி இட்டதுடன் ,17,140,354 வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.மேலும் 13421 வாக்களிப்பு மத்திய நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்பு நடவடிக்கைக்காக 63 ஆயிரம் பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.இதே வேளை தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்தி 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.22 தேர்தல் மாவட்டங்களிலும் மக்கள் சுமூகமான முறையில் வாக்களிப்பில் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *