போர் நிறுத்ததிற்கு அழைப்பு..!

லெபனான்( ஹிஸ்புல்லா அமைப்பு), இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாட்கள் போர்நிறுத்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா,பிரான்ஸ்,மற்றும் அதன் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை என்பவற்றை வலியுறுத்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையில் அண்மையில் இஸ்ரேல் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையில் நடந்த சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அபாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அமெரிக்கா பிரான்ஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்தம் ஒரு முன் மொழிவு மட்டுமே என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *