அமெரிக்காவின் தாக்குதலில் 10 ஹவுத்தி அமைப்பினர் பலி..!
அமெரிக்காவின் தாக்குதலில் 10ஹவுத்தி அமைப்பினர் கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது செங்கடல் பகுதியில் நடைப்பெற்றுள்ளது.சிங்கப்பூர் நோக்கி பயணித்த சரக்கு கப்பல் ஒன்றின் மீது ஹவுத்தி அமைப்பினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர் .இதனையடுத்து குறித்த கப்பலில் இருந்த கேப்டன் அபபகுதியில் நிலைக்கொண்டுள்ள அமெரிக்க படைகளுடன் தொடர்பினை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த அமெரிக்க படைகள் ஹவுத்தி அமைப்பினர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.இதன் போது 10 ஹவுத்தி அமைப்பினர் உயிரிழந்துள்ளனர்.
இதளே வேளை இவர்களுடைய 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன்,ஒரு படகில் மற்றைய ஹவுத்தி அமைப்பினர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் பாலஸ்தீன போரிற்கு மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துவருகின்ற நிலையில்,ஹவுத்தி அமைப்பினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.