சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்..!

இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட கால போருக்கு தயாராகவுள்ளோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் அண்மையில் லெபனான் மீது தாக்குதல் நடாத்தியது.இதன் போது ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்நிலையில் தொடர் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியது. இதன் போதும் முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் நயீம் கருத்து தெரிவிக்கும் போது. ஒருவர் கொல்லப்பட்டால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் உள்ளார்.ஆகவே தொடர்ந்து போரிடுவோம்.இஸ்ரேலால் எங்கள் திறன் மீது பாதிப்பை ஏற்படுத்த முடியாது துணை தளபதிகள் உள்ளனர்.போராளிகள் தயாராக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதே வேளை நேற்று முன் தினம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எதிரிக்கு எதிரான புனித போரை மேற்கொள்வோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பினர் சபதம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *