எதையும் சாதிக்க வல்லவன்..!

எதையும் சாதிக்க வல்லவன்

எதையும் சாதிக்க வல்லவர்
எவர்க்கும் துணையாக உள்ளவர்
பதைக்கும் உயிருக்கு நல்லவர்
பசிக்கும் உறவுக்கு நெல்லவர்

இவரின் கருத்துக்கள் ஏரணம்
இதயக் கோவில்சார் தோரணம்
கவரும் வகையில்தான் கூறினார்
காந்த அலைகளாய் மாறினார்

எழுச்சி ஊட்டங்கள் சொல்லணல்
ஏற்றம் கூட்டிடும் செம்புனல்
கொளுத்தி எரியூட்டும் வெங்கனல்
ஈரம் தேக்கிட்ட வெண்மணல்

துறவு அறவாழ்வு தெரிந்தவர்
துணிவைத் தன்னுள்ளே தரித்தவர்
இரவு பகலாக உழைத்தவர்
இளைஞர் இயக்கத்தில் திளைத்தவர்

~கவிவேந்தர் டாக்டர் சோமதேவன் சோமசன்மா ஜொகூர்,மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *