இவர்கள் எதனையும் மீறாதவர்கள்..!

பழங்குடி


பழங்குடிகளே
இயற்கையின்
எல்லையை
மீறாத
மனிதர்கள்…

அவர்களுக்கு
இயற்கையே
இறைவன் …

மரம் ,செடி ,
கொடிகளும் …
பறவைகள் ,
விலங்குகள் ,
தோழர்கள் …

புதிது புதிதாய்
தினமும் வளரும்
மனிதன்
நாகரீகமானவனாகத்
தெரிந்தென்ன …

உள்ளத்தில் …
வஞ்சனையும்
பேராசையும் …

பிறரின் ,
இயற்கையின்
அழிவில்
மகிழ்ச்சியும்
கொள்பவர்கள்
நாம் …

அதனால் தான்
உலகெங்கும்
இந்த நாகரீக
மனிதர்களாகிய
நாமே
சண்டையிட்டு
மடிகிறோம் …

இனியேனும்
பழங்குடிகளின்
மனப் பக்குவமும் ,
நமது அளவான
பகுத்தறிவும்
ஒன்று
கலக்கட்டும் –

இப்
புவியெங்கும்
நாமெல்லாம்
மனிதர்கள்
எனும்
ஒற்றைச் சொல்லே
ஓங்கி ஒளிக்கட்டும் …

மகிழ்ச்சியும்
ஆனந்தமும்
பொங்கிப்
பெருகட்டும் …
🙏❤️❤️❤️🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *