தேசிக்காயின் விலை குறைவடைந்துள்ளது..!

எழுமிச்சை பழத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் சடுதியாக அதிகரித்து காணப்பட்ட எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

கடந்த மாதம் சில கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தைகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை சில வாரங்களாக மழையுடனான வானிலை காணப்படுவதால் மரக்கறி வகைகளின் விலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *