பதிவுகள்

வெப்பநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளை (17) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் அறிவுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *