ஹாட்லி vs யாழ் இந்து சிட்னியில் வருடாந்த கிரிக்கெட்|ஹாட்லி வென்றது

ஹாட்லி பழைய மாணவர்களுக்கும் யாழ் இந்து பழைய மாணவர்களுக்கும் சிட்னியில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில்,ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

வருடா வருடம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தப்போட்டியில், இந்தவருடம் பெப்பிரவரி மாதம் 13ம் திகதி இடம்பெற்ற போட்டியில் இந்த வெற்றி பதிவாகியுள்ளது.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து பழையமாணவர்கள் அணி 39 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாடி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.யாழ் இந்து அணிக்காக காந்தன் 49 ஓட்டங்களையும் ரமேஷ் 29 ஓட்டங்களையும் ஆக்கூடுதலாக அணிக்கு பெற்றுக்கொடுத்திருந்தனர்.

ஹாட்லி அணியின் சார்பில் ரவி, ராஜாராம்,வசி மற்றும் சுஜேந்திரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் அணி 37 ஆவது ஓவரிலேயே 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 142 ஓட்டங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.

அணியின் சார்பில் நிசாந்தன் ஆட்டமிழக்காது பெற்ற 52 ஓட்டங்கள் , மற்றும் ஜோண்சன் பெற்ற 43 ஓட்டங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது.

பந்துவீச்சில் யாழ் இந்து அணியின் சார்பில் காந்தன் மற்றும் சஞ்சயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தனர்.

போட்டியின் நிறைவில் இங்கிலாந்திலிருந்து சிட்னி சென்று நிகழ்வில் பங்குபற்றியிருந்த ஐக்கிய இராச்சிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் திரு.அ.திருக்கேதீஸ்வரன் அவர்கள் , வெற்றி பெற்ற ஹாட்லி அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கியிருந்தார்.

போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஹாட்லியின் ஜோன்சன் தெரிவுசெய்யப்பட சிறந்த பந்துவீச்சாளராக யாழ் இந்துவின் சஞ்சயனும் தெரிவுசெய்யப்பட்டார்.சிறந்த களத்தடுப்பாளராக யாழ் இந்துவின் நிரஞ்சன் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். போட்டியின் ஆட்டநாயகனாக ஹாடலியின் நிசாந்தன் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.