தீவிரவாதம் உட்பட்ட பல குற்றங்களுக்காக 81 பேருக்குக் மரண தண்டனைகளை நிறைவேற்றியது சவூதி அரேபியா.

சவூதி அரேபியாவின் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்ட விபரங்களின்படி நாட்டில் 81 பேர் மீதான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஹூத்தி, அல் கைதா, காலிபாத் தீவிரவாதிகள் போன்ற இயக்கத்தில் சேர்ந்திருந்தவர்கள், அவ்வியக்கங்களுக்கு உதவி புரிந்தவர்கள் போன்றவர்களின் மரண தண்டனைகளே நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது.

அவர்கள் சவூதி அரச திணைக்களங்களில், கட்டடங்களில் தாக்குதல்கள், அரச ஊழியர்களைக் கொலை செய்தல், கடத்தல்களில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டு 13 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டதாகவும், மேன் முறையீடுகள் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *