தமிழ் வளம்


🌹அன்னைத் தமிழே அருந்தமிழே என்னை ஆட்சி செய்யும் பைந்தமிழே//


🌹முன்னோர்கள் வளர்த்த முத்தமிழே முதுமை உனக்கில்லை உலகினிலே//


🌹இயல் இசை நாடக வடிவங்கள் எல்லா அறமும் உனக்குள் அன்றோ//


🌹அறுசுவை உணவாய்த்தெரிகின்றாய் அன்பே உருவாய் அமைகின்றாய்//


🌹எழுதும் அன்பர் அனைவரையும் ஏணி போன்று ஏற்றி விட்டு ப் பார்க்கின்றாய்//


படிக்கும் இளஞர் மனதிற்குள் பசு மரத்தாணி போல் பதிகின்றாய்//


🌹பாடும் அனைவர் நெஞ்சினிலும் பண்பை கொண்டு வருகின்றாய்//


🌹நடிப்பில் எவரும் தோற்றதில்லை
நாவலர் கையிலும் நடனம் புரிகின்றாய்//


🌹எட்டுத் திக்கும் வலம் வந்து ஏலாதி அந்தாதி ஆகின்றாய்//


🌹சங்கம் வைத்த தமிழனுக்கு தரணி எங்கும் புகழ் தந்தாய்//


🌹அயல்நாடு எங்கும் வளர்கின்றாய் சிலருக்கு ஆட்சி மொழியாகவும் இருக்கின்றாய்//


🌹பிள்ளைத்தமிழே உன் பெருமையை பேசித் தீர்க்க முடியாது//


🌹பிள்ளைகளிடம் கொண்டு சென்று பெண்ணே உன்னை விதைக்கின்றேன்//


🌹எல்லா இன்பமும் உன்னிடமே எங்கே நானும் பிரிவ தென்று தலையால் வணக்கம் புரிகின்றேன் தயவாய்க் காக்க வேண்டுகிறேன்//

எழுதுவது : வீ மீனாட்சி மதுரை மாவட்டம். தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *