உண்மை உயர்த்தும்

உண்மை என்றும் உயரும்
உலகம் அறிய உதவும்
தன்மை இன்றேல் தாழ்வும்
தரத்தை வீழ்த்திச் செல்லும்

உன்னை அறிந்து இயங்கு
உயிரும் உன்னில் மயங்கும்
புண்ணை விதைத்து நின்றால்
புழுவும் வெறுத்து விலகும்

அன்னைத் தமிழைப் போன்று
அழியாப் புகழைத் தாங்கு
வின்னை நோக்கிப் பாரு
வினையும் இயற்கைப் பேரு

கண்ணைப் போலக் கருதி
கற்றோர் வழியைப் போற்று
அன்னை அப்பனைக் காத்து
அகிலம் போற்ற வாழு.

எழுதுவது :
உத்திராபதி இராமன் DSP, Ipoh, Perak, Malaysia