தைத்திருமகளே வருக

தைத் திருமகளே வருக
நன்மையைத் தருக!

வாழ்க்கை வளங்களை தருக!

விவசாயிகளுக்கு கொடையைத் தருக!

சந்தோஷமான வாழ்வைத் தருக!

தைத் திருமகளை
வரவேற்கும் பொங்கல்!

தங்க நிறத்தில் ஜொலிக்கும்
ஆயிரம் கரங்கள் நீட்டி
நம்மை அணைத்து காத்திடும்
கதிரவனுக்கு. அன்பான பொங்கல்!

பழையதை எரித்து
புதிய எண்ணங்களைக்
கொண்டு வரும் போகிப் பொங்கல்!

காலமெல்லாம் உணவளிக்கும்
விவசாயிகளுக்கு
நன்றி கூறிடும் பொங்கல்!

பிறப்பு முதல் நம்மைத்
தொடரும் பசுக்கள் எருதுகளை
அழகுபடுத்தி அலங்கரித்து
விருந்தளிக்கும்
மாட்டுப்பொங்கல்!

நம் குடும்பங்கள் தழைத்தோங்க
பொங்கி வரும் பொங்கல்!

குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை
புத்தாடை உடுத்தி
வாகனங்களில்
பவனி வரும்
சந்தோஷப் பொங்கல்!

பெரியவர்கள் ஆசீர்வாதம்
பெற்று வளமாக வாழ
காணும் பொங்கல்!

அனைவரும் குதூகலத்துடன்
கொண்டாடும் சந்தோஷப் பொங்கல்!

எழுதுவது : விஜயலட்சுமி