பொங்கல் வாழ்த்து

தைத்திங்கள் முதல் நாளாம்

தமிழர்களுக்கு இனிய திருநாளாம்!

செங்கரும்பு தரும் சாறும்

செழுங்கதலியின் தீஞ்சுவையும்

கறவை அளிக்கும் தீம்பாலும்

கட்டி வெல்லத் தேன்பாகும்

கலந்தினிக்க வந்த இந்நாள்

வாயிலிலே தூய்மை பொங்க

வாயினிலே வாய்மை பொங்க

வாழ்த்துகள் உரைத்திட்டேன்

வளமனைத்தும் பெற்றிடவே!

உலகோர் அனைவருக்கும்

உள்ளன்புடன் வாழ்த்துகள்!

வாழ்க! வாழ்கவே!

எழுதுவது : புலவர் கி. இராமதிலகம் இராஜபாளையம்.