புனையும் கவியெல்லாம்

உலக கவிதைகள் தின சிறப்பு இன்று

பாவினம் பயின்று பாட்டை படைக்கும்
பக்குவப் பாவலர்
படைப்பை போற்றிட
சாவினும் சிறந்த
சேவையை செதுக்கிய
சான்றோர் சால்பினை
சிந்திக்க சேருவோம்

உணர்ச்சியில் உமிழ்ந்திடும் உண்மை உருகிட
உழைப்பின் ஊக்கத்தில்
உவகை ஊற்றிட
இனத்தின் ஈகையினை இயந்தமிழ் ஈன்றிட
இயற்றிடும் இப்பாவும்
இதயத்தில் இன்பமே

தரணியில் இன்று
தலைநி மிர்ந்தோம்
திறமை கொண்டு
தனித்துவ மடைந்தோம்
பரணியை பாடிட
பண்டைய போரின்
பண்பாடு அறிந்தோம்
பெருமிதம் கொள்வோம்

கவிஞன் கதைக்கும்
கவினாள் இன்றே
காவியத் தலைவன்
கடமை காத்தான்
கவிநடை வெற்றியில்
கவிதை படைத்து
களிமனம் கொண்டான்
கதகதப்பை பகிர்ந்தான்

எழுதுவது : மதியுரு முனைவர்
உத்திராபதி இராமன் மலேசியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *