மழை

மழை

பறந்து விரிந்து
மழை

கூரையின் சின்னஞ்சிறு
தெருக்களோ

சாளரங்களின்
இடுக்குகளோ

முத்தமிட்டு கட்டிக்கொண்ட
கிளைகளோ

தொட்டுப்பழகி
விட்டுப்பிரிய மனமில்லாத
இலைகளோ

அதுவோ எதுவோ
அங்கோ இங்கோ
எங்கும் என்றும்

இம்மழை எத்தனை முறை
கொட்டினாலும்
தீராத பேரழகு..!

ஆ.சுதா M.Sc.,M.Ed.,M.Phil.,(PGDCA).,
உதவிப் பேராசிரியை,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *