தாயும் மகனும் பரிதாபமாக பலி

45வயதுடைய தாயும் 22வயதுடைய மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.கொழும்பு கடுவெல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு இன்று மாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பழுதடைந்த குளிர்சாதன பெட்டியை திருத்தும் போதே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.தந்தையும் இளையமகனும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தமையால் இவர்கள் இருவரும் இவ் விபத்தில் சிக்கவில்லை. திருத்தும் பணி நடக்கையில் தாயும் அருகில் இருந்துள்ளமையால் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *