சிறைகூடத்திற்குள் ஒருவர் இப்படி தற்கொலை

இலங்கையில் கடந்த காலங்களிலும் சரி அண்மைய காலங்களிலும் சரி சிறுவர் துஸ்பிரயோகங்கள் பல இடங்களில் நடைப்பெறுகின்றன. இதற்கு என்ன காரணம் என்று புரியாத புதிராக இருக்கிறது.

சமூகத்தில் காலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இவ்வாறான நடவடிக்கைகள் கவலையளிப்பதாக அமைந்துள்ளது.

இதனால் வீட்டை விட்டு பெண்கள்,சிறுவர்கள் வெளியில் செல்வது ஒரு சவாலான விடயமாக அமைந்துள்ளது.

இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் இருதியில் அதிகளவான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் .

இவ்வாறான நிலையிலேயே
சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஹம்பாந்தோட்டை பொலிஸ்நிலைய சிறைகூடத்திற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமூகத்தை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனுடைய கடமையாகும். அதற்காக ஒவ்வொரு தனிமனிதனும் சிந்தித்து செயலாற்ற வேண்டியது கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *