மஹாவலியில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி

மஹாவலி ஆற்றில் நீராட சென்ற சம வயது மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்றனர். அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த இச்சிறுவர்கள் பல்லேகெலே ,தென்னக்கும்புர பாலத்திற்கு அருகில் உறவினர்களுடன் நீராட சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மாணவர்களும் கண்டி பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சிறுவன் 24ம் திகதி உயிரிழந்தான். மற்றைய சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 25ம் திகதி உயிரிழந்துள்ளார்.

சிறுவர்களை கவனமாக பாதுகாக்க வேண்டியது பெற்றோருடைய கடமையாகும். ஆற்றில் நீராட செல்லும் போது பாதுகாப்பான இடங்களில் நீராட வேண்டியது கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *