மதுபான சாலைகள் மூடல்..!

சர்வதேச மதுஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்று மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் சாலைகளிலும் மது விற்பனையைத் தடுக்கும் உத்தரவை கலால் திணைக்களம் பிறப்பித்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உலக மதுஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

எனினும் பல்வேறு காரணங்களால் இளைஞர் யுவதிகள் மதுவிற்கு அடிமையாகியுள்ளனர்.இவர்களை இப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *