3வது நாளாக தொடரும் போர்..!

இஸ்ரேல் லிற்கும் ஹமாஸிற்கும் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்வுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 700 இஸ்ரேலியர்களும் 413 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போரானது தொடர்ந்து 3 வது நாளாக நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் இருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில் பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலுக்குள்,ஊடுருவியதில் 300 யூதர்கள் பலியாகியிருந்தனர். அதேவேளை 1,590 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

இஸ்ரேலின் 22 இடங்களில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி இருந்தது.இதே வேளை இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்ட அதேவேளை பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் மேற்கொண்டிருந்தது

இதனையடுத்தே தொடர்ந்து 3 நாளாக போர் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *