விடுதலை வேண்டி தவிக்கும் நாடுகள்..!

விடுதலை வேண்டித்
தவிக்கும் நாடுகள் ,
மானுட
இனங்களுக்கெல்லாம் …!


உன் சூரியப் பார்வை
ஒன்றே போதும் …!


எரிதழலாய்
கிளர்ந்தெழுவார்
மக்களெல்லாம் …!

இந்தப் பூமி உருண்டையில்
எங்கெங்கே
அடக்குமுறையும் ,
அடிமைத்தனமும் நீடித்துக்
கிடக்கிறதோ ? அங்கெல்லாம்
உன் சுவாசக் காற்று
வீசட்டும் …!

அடக்குமுறைகள்
எரிந்தொழிந்து … விடுதலை
தன் சிறகுகளை
விரிக்கட்டும் … என் அன்பான
சுந்தர சுதந்திர புருஷனே …!

🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *