பாலஸ்தீனத்திற்கான குடி நீரினை வழங்க இஸ்ரேல் இணக்கம்..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் ஒருவாரகாலமாக போர் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்திற்கான குடி நீர்,மின்சாரம்,உணவு ,போக்குவரத்து என்பவற்றை விநியோகிக்காமல் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பாலஸ்தீனத்திற்கான நீர் விநியோகத்தை மேற்கொள்ள இஸ்ரேல் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போரினால் பலர் உயிரிழந்துள்ளதோடு,பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.இதே வேளை இஸ்ரேலானது அடுத்த கட்ட நிகழ்வாக தரைவழி தாக்குதல்களை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *