இப்படியும் அரசாங்கம்..!

மது வீட்டுக்கும் ,
நாட்டுக்கும் கேடு …
இதை யார் யாருக்கு
உபதேசிப்பது …
சாத்தான் வேதம்
ஓதிய கதை …😭😭😭

அட … இந்த நிலையில்
இளைஞர்கள்
வருங்காலத் தூண்கள்
எனச் சொல்ல வெட்கப்பட
வேண்டாமா ?

இன்று அந்தத் தூண்கள் தான்
மெல்ல மெல்ல குடிப் பழக்கத்திற்கு
அடிமையாகி
துருவேறிக் கொண்டிடுக்கிறது …

தன் நாட்டு மக்களின் நலன்
காத்தால் அது நல்ல அரசாங்கம்
தன் நாட்டு மக்களின் நலம்
கெட விரும்பும் அரசாங்கம்
அது என்ன அரசாங்கம் …

ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு
மெல்ல மெல்லக் கொல்லும்
விஷம் கொடுத்து மகிழ்வாளா
என்ன ? 😭😭😭

தயவு செய்து ஆள வருவோர்களே !
இனியேனும் நல்ல தாயாக
ஆள வாருங்கள் … இலவசம்
கொடுத்து …பல லட்சம் பெருக்கும்
ஆட்சி முறை மக்களாட்சி
முறையே இல்லை … அரசியல்
லாபம் கருதிச் செய்ய அது ஒன்றும்
தொழில் இல்லை …
மக்கள் தொண்டு …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *