போதைப் பொருளை கடத்தி வந்த இந்தோனேசிய பிரஜை கைது..!

போதை பொருளை இரகசியமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்த இந்தோனேசிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சிறுவர் ஆங்கில கதைப்புத்தகத்தினூடே ஒழித்து மறைத்து வைத்து இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.

குறித்த போதை பொருளான கொக்கெய்ன் இருபத்தி மூன்று கோடிக்கும் அதிகமானது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் 42 வயதுடைய இந்தோனேசிய பிரஜை ஆவார். இவர் கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *