நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் 20ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்..!

நேற்றைய தினம் நேபாளத்தில நில நடுக்கம் பதிவானது. இதன் காரணமாக 20 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகின.மேலும் 75 ற்கும் மேற்பட்ட வீடுகளில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நில நடுக்கமானது ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இது டாடிங் மாவட்டத்தின் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று பிற்பகல் வரை 4 முறை நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை நேற்று முன்தினமும் நேபாளத்தில் நில அதிர்வு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *