எதை பேச வேண்டும்!உங்களுக்கு தெரியுமா?

உள்ளத்தில் உள்ளதை

நா பேச வேண்டும் …

பேனா எழுத வேண்டும் …

கற்பனை சிறப்புத்தான் …

அது ஏட்டுச் சுரைக்காய்
கறி சமைக்க உதவாததது போல ஆகிவிடக் கூடாது …

தனக்கும் பயனின்றி
யாருக்கும் பயனின்றின்றி
இருந்து என்ன பயன் …

உள்ளத்தில் உள்ளதை உள்ளபடியே
பேசி , எழுதி நடந்து காட்டியவர்களையே
காலம் தன் முதுகில்
தூக்கிச் செல்லும் …

உள்ளமொன்றை நினைக்க , நா ஒன்று பேச … வாழ்க்கையில்
அவரே அதற்கு
எதிர் வழியில் நடக்க …

கற்ற கல்வியால் யாருக்கு என்ன பயன் …

பாலையிலும் , பாறையிலும் விதை
விதைத்து …

கடலில் பெய்த மழை போல ஆகும் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *