இப்தெல்லாம் இதற்கு தான் மதிப்பு.

இன்றைய சூழலில் நிறைவாய் வாழ என்ன செய்திட வேண்டும்

இன்றைய காலகட்டங்களில் பணம் தான் பிரதானம் பணத்தை சம்பாதித்தால் இன்றைய கால சூழ்நிலையில் நிறைவாய் வாழலாம் ….இன்றைய காலகட்டங்களில் எங்கு சென்றாலும் பணம் பணம் பணம் அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்ற வழிமுறையை கற்றுக் கொண்டால் போதும் நாம் எதையும் வெல்லலாம் .

குணத்திற்கு மதிப்பு என்பது கிடையாது …உதாரணத்திற்கு ஒரு பெண் வரப்போகும் கணவரிடம் குணத்தை விட இன்னும் அதிகம் பார்க்கின்றனர் அவருக்கு சொத்து பத்துக்கள் இருக்கின்றதா வங்கிக் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்கின்றனர்.

அதன் பிறகே திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர் ….வீட்டை விட்டு வெளியில் வந்தாலே பணமில்லாமல் எதையும் செய்ய முடியாது.

முதலாளி இன்றைய காலகட்டங்களில் நிறைவாய் வாழ்வதற்கு பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் அதை எப்படி சேமித்து முதலீடு செய்ய வேண்டும் நம்மளுடைய பிள்ளைகளுக்கு ஏற்ற முதலீடா? பிற்காலத்தில் நமக்கு என்ன வருமானம் வரும் என்பதை ஆராய்ந்து தான் பார்க்க வேண்டும்.

பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் என்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைய கால சூழ்நிலையில் பொய்யாக மாறிவிட்டன …பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கேற்ப இன்றைய கால சூழ்நிலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *