மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவர்.

மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று மாலை அளுத்கம பெனிபெந்தி கொட பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியின் தலையில் சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து விட்டு தானும் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணிற்கு 30 வயதும் உயிரிழந்த ஆணுக்கு 36 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை அதிகமான குடும்ப தகராறு காரணமாக கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் பலர் அடித்துக்கொள்கின்றனர்.

இதன் காரணமாக இறுதியில் இடம் பெறுவது மரணம் மாத்திரமே.

இவ்வாறான சம்பங்கள் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைவது ஆன்மீகத்தையும் அன்பையும் மறந்தமையுமே,ஆகையால் ஒவ்வொரு நபரும் அன்பையும் ஆன்மீகத்தையும் நாட வேண்டியது மிக மிக முக்கியமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *