உங்களது புரிதல் இந்த மாதிரியானதா?

தலைப்பு;;புரிதல்

1.அன்பே புரிதல் உள்ளவாழ்வில் பிரிதல் இல்லை.

2.இதைப்புரிந்து நடப்பதால் நம்மிடம் விரிசல் இல்லை.

3.விட்டுக் கொடுப்போர் கெட்டுப்போவதில்லை

4.புரிதல் என்பதிருந்தால் பொறுமைஎன்பதும் இருக்கும்.

5.இரண்டும் சேரும்போது இல்லறமட்டுமல்ல எவ்வறமும் சிறக்கும்.

6.உறவுகளைப் புரிவதால் அன்பின்ஆழம் அதிகமாகும்.

7.நட்பைப் புரிவதால் அவ்வுறவு மகத்தானதாகும்.

8.குடும்பத்தில் புரிதல் குழப்பம் தவிர்க்கும்.

9.சமூகத்தில் புரிதல் சகிப்புத்தன்மை வளர்க்கும்.

10.என்னகொண்டுவந்தோம் என்ன கொண்டு செல்லப்போறோம்.

11.வாழும்வாழ்வில் சிலருக்காவது வழிகாட்டியாக புரிந்துவாழ்வோம்.

12.உதாரணமான வாழ்வை வாழ்ந்து புரிதலின் மகத்துவத்தை உணர்த்திச் செல்வோம்.

கோமதிசிதம்பரநாதன் உறையூர்,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *