12 வீரர்களை விடுவித்தது கல்கத்தா நைட் ரைடர்ஸ்..!

எதிர் வரும் 2024 ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19ம் திகதி டுபாயில் நடைப்பெற இருக்கிறது.

இதற்கமைய தங்களது அணியில் வீரர்களை தக்க வைத்துக்கொள்ள மற்றும் விடுவிக்க ஐபிஎல் அமைப்பு கால அவகாசம் வழங்கியிருந்தது. அது இன்றுடன் நிறைவடைகிறது.

இதற்கமைய விடுவிக்கப்படும் மற்றும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் படி கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷர்துல் தாக்கூர்,ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட 12 வீரர்களை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *