ஹமாஸ் போராளிகள் பணயக்கைதிகள் சிலரை விடுவித்ததாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றோடு 5 வது நாளாக இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் போராளிகள் 10 இஸ்ரேலியர்கள் மற்றும் 02 வெளிநாட்டு பிரஜைகள் உட்பட மேலும் 12 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் விளைவாக ,ஐந்தாவது நாளான நேற்று எகிப்துடனான ரபா கிராசிங் எல்லை வழியாக கஸாவில் இருந்து 12 பணயக்கைதிகளை விடுவிக்கவும் மாற்றவும் முடிந்தது என செஞ்சிலுவை சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலானது பாலஸ்தினத்தின் மீது போர் தொடுத்தமையால் பலர் உயிரிழந்ததுடன் பலர் காணமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *