3வது 20 ஓவர் போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் பலபரீட்சை…!

அவுஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 ஓவர்கள் கொண்ட 5 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இரணடு போட்டிகளில் இந்திய அணி வெற்றிப்பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இதே வேளை 3 வது 20 ஓவர்கள் கொண்ட போட்டி இன்றைய தினம் நடைப்பெறுகிறது.இப்போட்டியானது கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெறுகிறது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணி தோற்றால் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றும்.அவுஸ்திரேலிய அணி தொடரை இழக்கும் .

இதன் காரணமாக இரு அணிகளும் பலமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவுகாத்தியில் இதுவரை 20ஓவர் கொண்ட போட்டிகள் 3 ஐ இந்திய அணி விளையாண்டுள்ளது. இதில் 1 போட்டியில் வெற்றியும் 1 போட்டியில் தோல்வியும் இந்திய அணி சந்தித்துள்ளது .ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *