இன்றைய தலைமுறை இப்படி தான்..!

❎✅❎✅❎✅❎✅❎✅❎*இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

✅❎✅❎✅❎✅❎✅❎✅

“கூழானாலும்
குளித்துக் குடி”என்றார்கள்
இன்றைய தலைமுறைகளோ !
தேநீரையே குடிக்கின்றனர்
பல் துலக்காமல்….

“கந்தையானாலும்
கசக்கி கட்டு” என்றார்கள்….
இன்றைய தலைமுறைகளோ!
புது துணியைக் கூட
“கந்தையாக்கி” கட்டுகிறார்கள்….

“ஏழையானாலும்
இரவில்
நன்றாக உறங்கு” என்றார்கள்….
பணக்காரன்தான்
இரவு மூன்று மணி வரை
விழித்திருக்கிறான்….

“எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்” என்றார்கள்….
இறைவன் என்ன ?
எதிர் வீட்டுக்காரனாகக் கூட
ஆகவில்லை……

“அன்னையும் பிதாவும்
முன்னரி தெய்வம்” என்றார்கள்…
இவர்களுக்கோ…|
அப்பாவும் அம்மாவும் தான்
முதல் எதிரி…..

“காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்” என்றார்கள்
“மின்விசிறி காற்று “
இருந்தும் கூட….
இவர்கள்
“சும்மாவே “
உட்காந்திருக்கின்றனர்…..

*பருவத்தே பயிர் செய்”
என்றார்கள்…
இவர்களோ….|
பருவம் வருவதற்கு முன்பிருந்து
“களை” மட்டுமே
செய்கின்றார்கள்…… *கவிதை ரசிகன் குமரேசன்*

✅❎✅❎✅❎✅❎✅❎✅

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *