இதன் அருமை எப்போது புரியும்..?

விவசாயமே
உனை மறந்து போகுமோ ? உலகம் …

பசிக்கிற போது
உணவு இல்லையெனில்
அதன் வேதனையை
அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே
தெரியும் …
விவசாயத்தின் அருமையும் , பெருமையும்…

மழை பெய்யவில்லையா ?
வரட்சி வரும்போது
தான் தெரியும்
மரங்கள்
தரும் வரமே மழையென …

அதே மழை
அதிகமாகக் கொட்டி …
தெருவெங்கும் வெள்ளமும் ,
வீட்டினுள் புகுந்து
அழிவைத் தரும்
இப்போதைய நிலையையும் …

நாம் வாழ்ந்து வந்த
பேராசையே இதன்
மூல காரணம் …
என எப்போதுதான்
உணரப் போகிறோம் …

இங்கே ஆளும் அரசு முதல் , சாமானிய மக்கள் வரை பேராசையே முழு முதற்
காரணம் என … 😭😭😭

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *