சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!

05 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

63 வயதுடைய பாதிரியாரே கைது செய்யப்பட்டுள்ளார்.கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கிவரும் தங்குமிடமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2020 முதல் 9 முதல் 17 வயதிற்குட்பட்ட சிறுமிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *