4 கிலோ கிராம் கொக்கெய்னுடன் கென்ய பிரஜை கைது..!

கென்யாவை சேர்ந்த 34 வயதுடைய பிரஜை ஒருவர் கொக்கெய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 300மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே, சுமார் 4 கிலோ கிராம் கொக்கென் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து கட்டார் நாட்டின் டோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது மூன்று பிஸ்கட் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கொக்கைன் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட கென்ய நாட்டவரும் கடத்தப்பட்ட பொருட்களும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *