மண்ணில் மனிதம் செய்தது என்ன?

மண்ணில்

மனிதம்

செய்தது

வஞ்சகம்

ஏமாற்று

திருட்டு

உருட்டு

நம்பிக்கை துரோகம்

ஊழல்

கொலை

களவு

மோசடி

அநீதி

இவையெல்லாம்

நீதி

பரிபாலனை

செய்யவேண்டிய

பொறுப்பில்

உள்ள

அரசியல்வாதி

அதிகாரிகள்

மந்திரிகள்

காவல்துறை

சட்டத்துறை

இவர்களின்

மாதிரி

அவலங்கள்.

மனிதம்

என்பதை

மறந்த

மதங்கள்

மொழிகள்

இனங்கள்

சாதிகள்

நாடுகள்

தான்

உலக

வரைபடத்தில்

அதிகம்.

மனிதர்களின்

வேட்டையில்

பாவம்

ஜீவகாருண்யம்.

இரத்தம்

சிந்தாத

உயிர்கள்

கற்பு

தரவுகள்

இங்கு

ஏது?

மதம்

மொழி

இன

நாடு

அபிலாசையில்

இரத்த

தந்துகிகள்

கதறி

அழுகின்றன.

வடிக்காத

வெடிக்காத

இரத்தம்

ஏது?

மனிதர்களின்

நிறம்

சிவப்பு.

இனி

அவர்களால்

ஓநாய்களாக

மட்டுமே

வாழ

இயலும்.

அன்பு

என்று

கூறி

வரும்

அனைத்தும்

ஏதோ

ஓர்

இன மயமாக்கல்

கொள்கைகளின்

பலிபீடங்களே!

இங்கு

சைவம்

காதலில்

காமத்தில்

ஆசையில்

மனிதத்தில்

எங்கும்

இல்லை.
கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *