இதயம் எதனால் அசையவில்லை..!

நீயே என் இதயம்

நீயே என் இதயம்
உன் மூச்சுகாற்றே
என் இதயதுடிப்பு
உன் வரவே என் வசந்தம்
உன் பார்வையே என் காட்சி

உன் கற்பனையே என் கவிதை/

மொழியே என் பேச்சு
நினைவே என் மனது
அழகே என் கம்பீரம்/

தவமே என் வரம்
வாழ்வே என் வாழ்வு
வா அன்பே வாழ்ந்து காட்டுவோ./

எறும்பூரக் கல்லும்
கறையுமென்பார்

பெண்னென்றால் பேயும்
இறங்குமென்பார்
ஏனோ உன்./
இதயம் மட்டும் சற்றும்
அசையவேயில்லையே./

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *