கோடி செல்வத்திற்கு ஈடாகுமா இது..?

மழலைச்செல்வம்!!


முதல் தொடுகையில் புனிதம் உணர்ந்தேன்!


பொக்கை வாய்ச்சிரிப்பில் புளங்காகிதம் பெற்றேன்!


உச்சி முகர்கையில் உள்ளம் மகிழ்ந்தது!
முகம்பார்த்து சிரிக்கையில் முத்தமிழாய் இனித்தது!


தொட்டிலில் நீஇருக்கமுழுநிலவாய் உன்னைரசித்தேன்!


தவழ்ந்து வரும் பருவமதில் தாவிநானும் அணைத்தேன்!


நெஞ்சோடு அணைத்தேன்!நேசமதைப்பெற்றேன்!


உன்னைத் தூக்கையில் உலகையே மறந்தேன்!


கோடிச்செல்வங்கள் கூடி இருந்தாலும் மழலைச்செல்வமான உனக்கு ஈடேது!!!

கோமதிசிதம்பரநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *