அம்பருடன் மூவர் கைது..!

சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான 4 கிலோ 500 கிராம் திமிங்கல அம்பர் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக இருந்த நிலையில்,
மூன்று சந்தேக நபர்கள் தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசத்தில் மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *