நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு…!

நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவமானது ஆப்கானிஸ்தானில் இடம் பெற்றுள்ளது.நேற்று இரவு நூரிஸ்தான் மாகாணம்,நூர் கிராம் மாவட்டத்தில் காணப்படும் மலைப்பகுதியில் அதிக மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 20 ற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன .இதன் போது வீடுகளுக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதனை தொடர்ந்து மீட்பு படையினர் ,இன்று மதியம் வரை 5 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்களை தேடும் பணி தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *